Kaorainadu Mahagana Sangam

     தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் (அந்நாளைய மாயவரம்) மேற்குப் பகுதியில் தற்போது ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதி கூறைநாடு என்பதாகும். திருமணத்தின் போது மணமகள் கட்டும் கூறைச் சேலை நெய்யும் ஊர் என்பதால் இப்பகுதிக்கு கூறைநாடு என்ற பெயர் வந்தது. ஆங்கிலத்தில் அக்காலத்தில் KORANAD என எழுதப்பட்டு அதுவே தமிழிலும் சொல்லப்பட்டு கொரநாடு என மாறிப் போனது. பழம் பெருமை வாய்ந்த இக்கூறைச் சேலை நெய்யும் தொழிலைச் செய்த மக்களான சாலிய சமுதாயத்தினர் இப்பகுதியில் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் இங்கு குடியமர்ந்தனர்.

     கூறைநாட்டுச் சாலியர்களின் பூர்விகம் காஞ்சிபுரமாகும். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கு நெசவுத் தொழில் செய்து வந்த சாலிய சமுதாய மக்கள், அப்பகுதியினை ஆண்ட “சால்வா நாயக்” என்ற நவாப் மன்னன் சாலிய சமுதாயத்தில் இருந்து ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்து துன்புறுத்தியதால், அரச தண்டணைக்கு ஆளாக நேரிடும் என அஞ்சி இரவோடு இரவாக காஞ்சியை விட்டுப் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டு தென்பகுதியை நோக்கிப் சென்றனர். தாங்கள் ஊர் எல்லையைத் தாண்டும் வரை நவாபிற்குத் தெரியாமல் தங்களைக் காத்திடுமாறு காஞ்சி வரதராஜப் பெருமாளை வேண்டினர். நவாபின் படை வீரர்கள் சோதனையிட வீடுகளுக்கு வந்தபோது, பெருமாளும் உள்ளிருந்து வியாபர நிமித்தம் வெளியூர் சென்றிருப்பதாக்க் குரல் கொடுத்துக் காப்பாற்றியதாகவும் ஒரு வரலாறு உண்டு. அதனை நினைவு கூர்ந்திடும் வகையில் இன்றளவும் தங்கள் வீட்டுத் திண்ணையில் கம்பம் நட்டு, கம்ப சேவை என்ற வகையில் பெருமாளை வழிபடும் வழக்கத்தினைப் பின்பற்றுகின்றனர்.

    தமிழகத்தின் தென்பகுதியினை நோக்கி நடைபயணமாகக் கிளம்பிய இவர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், நாகர்கோயில், சாலியமங்கலம், குத்தாலம் போன்ற ஊர்களுக்குச் சென்றனர். ஒரு பிரிவினர் மாயவரம் வந்து காவிரி ஆற்றின் தென்கரையில் தங்கினர். சிதம்பரத்திற்கு அருகாமையில், புவனகிரி அருகில் உள்ள கீரப்பாளையம் என்ற ஊருக்கு வந்த போது, ஒரு குடும்பத்தினைச் சேர்ந்த பெண்ணிற்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் அக்குடும்பம் மட்டும் அங்கிருந்த தோப்பில் தங்கியதாகவும், சுகப்பிரசவம் ஆனால், more..